பாலமேடு கோயில்களில் திருக்கார்த்திகை உற்சவம்
பாலமேடு: பாலமேடு பாறைகல் தெரு கருப்புசாமி கோயில், வடக்கு தெரு செல்லத்தம்மன் கோயில், நாயுடு தெரு முத்தாலம்மன் கோயில், நாடார் தெரு மாரியம்மன் கோயில்களில் திருக்கார்த்திகை உற்சவம் நடந்தது. மஞ்சமலை ஆற்றில் அனைத்து சமுதாயத்தினர் பனை மரம் நட்டு சொக்கப்பனை கொளுத்தினர்.
சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை உற்சவம் நடந்தது. இங்குள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமி சன்னதியில் விளக்குகள் ஏற்றப்பட்டன. சர்வ அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் சுவாமி எழுந்தருளினார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர். வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பரணி தீபம் ஏற்றி 18 சித்தர்களை சுற்றிவந்து அஷ்டலிங்கமாக அருள்பாலித்தார். மாலை மகாஜோதி தீபம் ஏற்றப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் கோபிநாத் செய்தார்.