நிம்மதியாக வாழ வைக்கும் விரதம்
ADDED :1676 days ago
கணவர், குழந்தைகள் தீய வழக்கங்களில் ஈடுபட்டால் பெண்கள் படும் துன்பத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவர்கள் மனம் திருந்தி நற்குணத்தை அடைய பெண்கள் கார்த்திகை விரதம் மேற்கொள்ளலாம். திருக்கார்த்திகை தொடங்கி ஓராண்டுக்கு மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் தவறை உணர்ந்து திருந்துவர். துன்பம் விலகி நிம்மதி பிறக்கும்.