உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் மார்கழி வழிபாடு: திருப்பாவை பட்டில் தரிசனம்

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் மார்கழி வழிபாடு: திருப்பாவை பட்டில் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு இன்று காலை 9:20 மணிக்கு வெள்ளிக்குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். அப்போது திருப்பாவை பட்டுச் சேலையை ஆண்டாளுக்கு சாற்றி சிறப்பு பூஜைகளை ரகுராம் பட்டார் செய்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்களும், புதுமண தம்பதிகளும் அதிகளவில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோயில் பட்டர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். இன்று முதல் தினமும் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !