ஆட்ட நாயகன் இவரே!
ADDED :1465 days ago
முனிவர்களான வியாக்ர பாதர், பதஞ்சலி இருவரும் தில்லை வனமான சிதம்பரத்தில் தவமிருந்தனர். அவர்களுக்காக சிவன் இங்கு ஆனந்த தாண்டவம் ஆடினார். அதில் பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, தில்லை வாழ் அந்தணர்கள் அனைவரும் பங்கேற்றனர். சிவன் அருகில் பார்வதியும் நின்று நடனத்தை ரசித்தாள். இதனால் ‘சிவகாமி’ என்ற பெயர் பெற்றாள். இதை விட சிறப்பாக யாரும் நடனமாட முடியாது என்பதால் ஆடலரசன் என்னும் பொருளில் ‘நடராஜர்’ எனப் பெயர் பெற்றார்.