உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாலயபுரத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

சிவாலயபுரத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

மதுரை: மேலூர் வட்டம், தும்பைப்பட்டி, சிவாலயபுரத்தில் அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை வழிபாடு இன்று(26ம் தேதி) மாலை 4.00 மணிக்கு துவங்கி நடைபெற்றது. நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு கால பைரவருக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு  பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகங்கள் நடைபெற்றது.

இன்றைய இறைப் பணியில்  சென்னகரம்பட்டி ராஜா - லீலா, ஸ்ரீனிவாசன் - காளிதேவி குடும்பத்தினர். பக்தர்கள் சிவ புராணம், கோளாறு பதிகம், பைரவர் பதிகம், தேவாரம், திருவாசகம் பதிகங்கள் பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு,   தயிர் சாதம், உளுந்து வடை, பாசி பயறு பாயசம் அபிஷேக பால், பஞ்சாமிர்தம், பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் , சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !