சங்கடம் நீக்கும் மகாசங்கடஹர சதுர்த்தி இன்று!
சங்கடஹர சதுர்த்தி: நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும். மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். அது மஹா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது. அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.
சதுர்த்தியின் மகிமை : சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி ! ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.
வழிபடுவது எப்படி: இடையூறு நீக்கி நீங்கள் விரும்பியதைப் பெற இவ்வழிபாடு பெருந்துணை செய்யும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறைச் சதுர்த்தி இரவில் சந்திரன் உதயமான பிறகு இப்பூஜையைச் செய்க.
சதுர்த்தியின் மகிமை: 1. ஆசமனம் 2. சுக்லாம் பரதரம் 3. பிராணாயாமம் 4. ஸங்கல்பம்
மமோபாத்த சமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச் வர ப்ரீயர்த்தம் கரிஷ்ய மாணஸ்ய கர்மண: அவிக்நேந பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ விக்நேச்வர பூஜாம் கரிஷ்யே. (நீரால் கைகளைச் சுத்தம் செய்து கொள்க.)
ப்ருதிவ்யா : மேருப்ருஷ்ட ருஷி : (தலையில்), அதலம் சந்த: (மூக்கு), கூர்மோ தேவதா (மார்பில்), ஆசனே விநியோக: (ஆசனத்தைத் தொட்டுக் கொண்டே சொல்லவும்). ப்ருதிவி த்வயா த்ருதலோகா தேவித்வம் விஷ்ணுநா த்ருதா த்வம் ச தாரய மாம் தேவி பவித்ரம் ச ஆசனம் குரு
கண்டா பூஜை :
ஆகமார்த்தம் து தேவானாம்
கமனார்த்தம் து ரக்ஷ்ஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதா (ஆ)ஹ்வாந லாஞ்சனம்
(மணியை அடித்துக் கொண்டே மேற்கண்ட சுலோகத்தைச் சொல்லவும்).
தியானம் + ஆவாஹனம் :
கணாநாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பத
ஆந: ச்ருண்வந் நூதிபி: ஸீத ஸாதனம்
அகஜாநந பத்மார்க்கம் கஜாநநம் அஹர்நிஸம்
அநேகதம் தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே
அஸ்மிந் பிம்பே ஸ்ரீ விக்நேச்வரம் த்யாயாமி.
ஆவாஹயாமி (பூ, அட்சதை எடுத்து மஞ்சள் பிள்ளையார் மீது இடவும்.)
உபசார பூஜை :
ஸ்ரீ விக்நேச்வராய நம : ஆசனம் சமர்ப்பயாமி (பூ சமர்ப்பிக்க)
ஸ்ரீ விக்நேச்வராய நம : அர்க்யம் சமர்ப்பயாமி ( நீர் கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஸ்ரீ விக்நேச்வராய நம : பாத்யம் சமர்ப்பயாமி (நீர் கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஸ்ரீ விக்நேச்வராய நம : ஆசமநீயம் சமர்ப்பயாமி (நீர் கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஸ்ரீ விக்நேச்வராய நம : ஸ்நாநம் சமர்ப்பயாமி (நீர் தெளிக்க )
ஸ்ரீ விக்நேச்வராய நம : ஸ்நாநாந்நந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி
ஸ்ரீ விக்நேச்வராய நம : வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் சமர்ப்பயாமி
ஸ்ரீ விக்நேச்வராய நம : உபவீதார்த்தம் அக்ஷதான் சமர்ப்பயாமி
ஸ்ரீ விக்நேச்வராய நம : கந்தம் தாராயாமி சமர்ப்பயாமி
ஸ்ரீ விக்நேச்வராய நம : ஹரித்ரா குங்குமம் சமர்ப்பயாமி
ஸ்ரீ விக்நேச்வராய நம : புஷ்பைஸ்ச பூஜயாமி
அர்ச்சனை
ஓம் ஸுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விகடாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் விநாயகாய நம
ஓம் தூமகேதவே நம
ஓம் கணாத்யக்ஷõய நம
ஓம் பாலசந்த்ராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்பகர்ணாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம
ஓம் ஸ்ரீம் மஹா கணாதிபாய நம:
நாநாவித பரிமள மந்த்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.
ஓம் விக்நேச்வராய நம தூபம் ஆக்ராபசாமி
ஓம் விக்நேச்வராய நம தீபம் கர்சயாமி
ஓம் விக்நேச்வராய நம நைவேத்யம் நிவேதயாமி
(வெற்றிலை, பாக்கு, பழம் நிவேதனம் செய்க.)
நிவேதனாந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி.
தாம்பூலம் சமர்ப்பயாமி.
ஸ்ரீவிக்நேச்வராய நம: கர்ப்பூர நீராஜனம் சமர்ப்பயாமி
நீராஜனாந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி.
சமஸ்த உபசார பூஜாம் சமர்ப்பயாமி.