கோவில்கள் அடைப்பு.. வாசலில் நின்று பக்தர்கள் தரிசனம்
ADDED :1530 days ago
மதுரை:தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் பரவலை தடுக்க அரசு சில கட்டுபாடுகளை அறிவித்து வெள்ளி முதல் ஞாயிறு வரை வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசிக்க தடை விதித்தது. இன்று தமிழ்நாட்டில் கொரோனா, ஒமைக்ரான் தொற்று காரணமாக பிரசித்தி பெற்ற கோவில்கள் மூடப்பட்டுள்ளன. கோவில்கள் வார மூடப்படுவதால் , பக்தர்கள் வாசலில் நின்று சாமி கும்பிட்டு செல்கின்றனர்.