மருதமலை கோவில் உண்டியலில் 58 லட்சம் ரூபாய் காணிக்கை
ADDED :1531 days ago
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. பொது உண்டியலில், 58 லட்சத்து, 19 ஆயிரத்து, 479 ரூபாயும், 77 கிராம், 41 மில்லி கிராம் தங்கமும், 2,326 கிராம், 78 மில்லி கிராம் வெள்ளியும் இருந்தது. உண்டியல் எண்ணிக்கையின் போது, அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில், பழனி பக்தர்கள் பேரவையினர் ஈடுபட்டனர்.