ஸ்ரீரங்கம் கோயிலில் மார்கழி பாவை நோன்பு: இருபத்தி நான்காம் நாள் விழா
ADDED :1379 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடந்து வரும் மார்கழி பாவை நோன்பு விழாவின் இருபத்தி நான்காம் நாளான இன்று திருப்பாவையில் ஆண்டாள் பாடியருளிய..
அன்றி இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத்தென்னிலங்கைசெற்றாய் ! திறல்போற்றி
பொன்றச்சகடம் உதைத்தாய் ! புகழ்போற்றி !
கன்றுகுணிலா எறிந்தாய் ! கழல்போற்றி !
என்ற திருப்பாவை இருபத்தி நான்காம் பாசுரத்திற்கு ஏற்ப உற்சவர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரை, " குன்று குடையா எடுத்த குமரன் (நின் கையில் வேல் போற்றி)" திருக்கோலத்தில் அலங்காரம் செய்வித்து தினப்படி பூஜைகள் நடந்தேறியது. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.