உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவம்

உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தை முன்னிட்டு பெருமாள் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார்.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முதல்நாளான நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார், தேகளீச பெருமாள் கண்ணாடி அறையில் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீசபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி பக்தி உலாவை தொடர்ந்து, ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தனர். இரவு 7:30 மணிக்கு கண்ணாடி அறையில் திவ்யபிரபந்த துவக்க,ம் சேவை சாற்றுமறை நடந்தது. இரவு 9:00 மணிக்கு ஆஸ்தானம் எழுந்தருளினர். ஜீயர் ஸ்ரீ தேகளீசராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் ஏஜென்ட் கோலாகலன் மேற்பார்வையில் விழா ஏற்பாடுகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !