உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரிக்கு நான்கு நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

சதுரகிரிக்கு நான்கு நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு நாளை (பிப்.14) முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கபட உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி நாளை காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிக்கவும், இரவு கோயில் வனப்பகுதியில் தங்குவதை தவிர்த்து உடனடியாக திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்பாராத வகையில் கன மழை பெய்தால் பக்தர்கள் மலை ஏறுவது நிறுத்தி வைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !