திருச்சுழி மாரியம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு
ADDED :1361 days ago
திருச்சுழி: திருச்சுழியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாசி பொங்கலை முன்னிட்டு, கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, பத்து நாட்கள் நடைபெறும் விழாவில், நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில், புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.