கோவில்களுக்கு ஒரு கால பூஜைக்கு நிதியுதவி வழங்கல்
ADDED :1456 days ago
புதுச்சேரி: கோவில்களுக்கு ஒரு கால பூஜைக்கான நிதியுதவி வழங்கப்பட்டது.லாஸ்பேட்டை தொகு திக்குட்பட்ட குறிஞ்சி நகர் செல்வ விநாயகர், ஞான விநாயகர், அசோக் நகர் செல்வ சக்தி விநாயகர் ஆகிய கோவில்களுக்கு ஒரு கால பூஜைக்கு அரசு நிதியுதவி வழங்கப்பட்டது.ரூ. 1.5 லட்சத்திற்கான காசோலையை, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார். காங்., செயலாளர் நந்தா கலைவாணன், மாநில பிரதிநிதி அய்யப்பன், வட்டார காங்., தலைவர்கள் ராஜா, கோவிந்தராஜ் கலந்து கொண்டனர்.