உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் மகாசிவராத்திரி வழிபாடு; பல்லாயிரம் பக்தர்கள் தரிசனம்

சதுரகிரியில் மகாசிவராத்திரி வழிபாடு; பல்லாயிரம் பக்தர்கள் தரிசனம்

வத்ராயிருப்பு: சதுரகிரிகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மகாசிவராத்திரி வழிபாடு சிறப்புடன் நடந்தது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மதியம் 2 மணி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறினார். கோவிலில் இரவு 7:00 மணி முதல் மகா சிவராத்திரி வழிபாடு துவங்கியது. சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களை கோயில் அர்ச்சகர்கள் செய்தனர். இரவு 8 மணி, 12:00 மணி, அதிகாலை 2:00 மற்றும் 5:00 மணி வரை நான்கு கால சிவராத்திரி பூஜைகள் நடந்தது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், உணவு வசதி செய்யப்பட்டிருந்தது. தாணிப்பாறையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், மதுரை உட்பட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வத்திராயிருப்பு, சாப்டூர் பகுதி போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !