உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி கோயிலில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி உலா

காளஹஸ்தி கோயிலில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி உலா

சித்தூர்: காளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8-வது நாளான இன்று காலை அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் காமதேனு வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயார் இன்று (வியாழக்கிழமை) நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பலித்தனர்.


முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பித்த பின்னர் பஞ்ச மூர்த்திகளான விநாயகர் ,வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஞானபிரசுனாம்பிகை தாயார் ,சண்டிகேஸ்வரர் ,கண்ணப்பர் ஆகியோர் ஒன்றன்பின் ஒன்றாக 4 மாட் வீதிகளில் உலா வந்தனர்.மூஷிக வாகனத்தில் விநாயகர் ,சப்பரங்களில் சுப்பிரமணிய சுவாமி சண்டிகேஸ்வரர் கண்ணப்பர்  நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் .வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர் .இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !