மகாபாரதமும்.. அரவான் வழிபாடும்!
ADDED :1404 days ago
வியாசரின் மகாபாரதம் அர்ஜுனனுக்கும் திருமணம் நடந்ததையும் அவர்களுக்கு அரவான் பிறந்ததையும் சித்தரிக்கிறது. அதில் அரவான் மகாபாரதப் போரில் இறப்பதாகக் காட்டப்படுகிறது. ஆனால் பாரதத்தின் தமிழ் வடிவங்களில் அரவான் பலி கொடுப்பதாக கூறப்படுகிறது.
கண்ணன் மோகினி அவதாரம் எடுத்து அரவானைத் திருமணம் செய்து கொண்டதால் திருநங்கைகள் அரவான் கோயிலுக்குச் சென்று அவனைத் தன் கணவராக வரித்துக் கொண்டு தாலி கட்டிக் கொள்கின்றனர். பின்னர் அரவான் மகாபாரதப் போருக்கு களபலியானான் என்பதால் தங்கள் தாலியைத் துறந்து விதவைக் கோலத்தில் ஒப்பாரி வைக்கிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் இந்த நிகழ்வுகள் கூத்தாண்டவர் வழிபாடாக பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. கூத்தாண்டவர் என்று குறிப்பிடப்படுவது அரவான்தான். தமிழகத்திலுள்ள பல பகுதிகளில் அரவான் கோயில்கள் உள்ளன. அவர் காவல் தெய்வமாகவும் பல பகுதிகளில் வழிபடப்படுகிறார். மதுரையில் உள்ள கோயிலில் மிகப்பெரிய அரவான் சிற்பம் காணப்படுகிறது. சிங்கப்பூரில் உள்ளது தொன்மையான மகா மாரியம்மன் கோயிலில் அரவானின் முகம் மரத்தில் பிரம்மாண்ட வடிவில் காணப்படுகிறது. இந்தோனேசியாவிலும் அரவான் வழிபாடு உள்ளது. தமிழக நாட்டுப்புறக் கலையான கூத்து வடிவிலும் அரவான் கதை நிகழ்த்தப்படுகிறது