உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிளியூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

கிளியூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

உளுந்தூர்பேட்டை: கிளியூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா கிளியூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. இத்திருவிழாவையொட்டி கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. 8 நாட்கள் இரவு உற்சவம் நடந்தது.

9ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் வீதியுலா நடந்தது. தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். இத்தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு நல்லதண்ணீர் குளக்கரையில் இருந்து அக்னி கரகம் ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தது. இரவு 7.30 மணியளவில் ஆடுகளுக்கு அலகு குத்தி 50 அடி உயரத்தில் செடல் உற்சவம் நடந்தது. இன்று(26ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !