சரநாராயண பெருமாளுக்கு கோதண்ட ராமர் அலங்காரம்
ADDED :1465 days ago
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று 31ம் தேதி மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று 31ம் தேதி பங்குனி மாத அமாவாசை முன்னிட்டு, மூலவர் சரநாராயண பெருமாள் சீதாலட்சுமண அனுமன் சமேத ஸ்ரீகோதண்டராமராக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு சுப்ரபாதம், 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம். காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பகல் 12:30 மணிக்கு உச்சி காலபூஜை, மாலை 4:00 மணிக்கு நடை திறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8:30 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெற்றது.