புண்ணியக் கணக்கு
ADDED :1457 days ago
விவசாயி ஒருவர் தோட்டத்தில் காய்கறிகளையும், மற்றொருவர் வயலில் நெல்லையும் பயிரிட்டனர். இப்படி விவசாயம் செய்பவர்கள் தினந்தோறும் தானம் செய்கின்றனர். எப்படி என்று கேட்கிறீர்களா.. பயிரிட்ட காலத்திலும், அறுவடை காலத்திலும் அனைத்து ஜீவராசிகளும் இங்கு வந்து பசியாறும். இவர்களது புண்ணியக் கணக்கில் இது வரவு வைக்கப்படுகிறது.