கமுதி அருகே பத்திரகாளியம்மன் கோயிலில் பங்குனி விழா
ADDED :1311 days ago
கமுதி: கமுதி அருகே தலைவநாயகன்ப்பட்டி கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா நடந்தது.பக்தர்கள் கடந்த ஒருமாதமாக காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர்.கோயில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து கிடாவெட்டி நேர்த்திகடன் செலுத்தினர். பத்திரகாளியம்மன் பால்,மஞ்சள், சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகம், சிறப்புபூஜைகள் நடந்தது.மூலவரான அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.பின்பு கோயிலில் இருந்து பக்தர்கள் முளைப்பாரி தூக்கி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று மலட்டாறில் கரைத்தனர்.கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் கலந்து கொண்டனர்.