தொட்டிச்சி அம்மன் கோயில் திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :1318 days ago
மேலூர்: மேலுார், சொக்கம்பட்டி தொட்டிச்சி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி பக்தர்கள் மேலுார் மெயின் ரோட்டில் உள்ள பிள்ளையார் கோயிலில் இருந்து பால்குடம், பறவை காவடி எடுத்தும், தீ்ச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அங்கு அம்மனுக்கு பாலாபிசேகம் செய்யப்பட்டது. இதில் சொக்கம்பட்டியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.