கடலூரில் அப்பர் கரையேறிய ஐதீக நிகழ்ச்சி: ஏராளமானோர் தரிசனம்
ADDED :1349 days ago
கடலூர்: வண்டிப்பாளையம் கரையேற விட்ட குப்பத்தில் அப்பர் கரையேறிய ஐதீக நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி, அப்பர் உற்சவர்களுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் அப்பர் வெள்ளி விமானத்தி லும், பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் விமானத்திலும் ஊர்வலமாக வண்டிப்பாளையம் சென்றதும், அங்கு சுப்பரமணி சுவாமி கோவில் நிர்வாகத்தால் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கரையேறவிட்டக்குப்பத்தில், அப்பர் கரை யேறிய குளக்கரையில் எழுந்தருளினார். அங்கு ஓதுவார்கள் நமச்சிவாயம் பதிகத்தைப் பாட அப்பர் குளத்தில் 10 முறை தெப்பமடித்து கரையேறிய வரலாற்று பெருவிழா நடந்தது. தொடர்ந்து அப்பருக்கு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர், சுப் ரமணிய சுவாமி மற்றும் விநாயகருடன் அப்பர் வீதியுலாவாக வந்து பழைய வண்டிப்பாளையத்தில் மண்டகப்படி நடைபெற்றது.