பீமன் கட்டே 1008 மகான் ஸ்ரீரகுத்துவ ஜதீர்த்தர் சுவாமி ஆராதனை விழா
ADDED :1454 days ago
ஈரோடு : சத்தியமங்கலம் பவானி ஆற்றின் கரையோரம் உள்ள பீமன் கட்டே ஸ்ரீ ஸ்ரீ 1008 மகான் ஸ்ரீரகுத்துவ ஜதீர்த்தர் சுவாமிக்கு ஆராதனை விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கர்நாடக மாநில சிமோகா மாவட்டம் தீர்த்த ஹள்ளி பீமன்கட்டே மடாதிபதி ஸ்ரீ ரகுவரேந்திர தீர்த்தர் தலைமையில் ஆராதனை விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீர குத்துவஜதீர்த்தர் மூல பிருந்தாவன நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.