ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி தரிசனம்
ADDED :1406 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு நேற்று தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ஜூவ்வாடி .ஸ்ரீதேவி குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவருக்கு கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர். பின்னர் கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசீர்வாதம் செய்தனர்.