மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
ADDED :1283 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் சித்திரைப் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்து, பக்தர்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பூக்களால் அபிசேகம் செய்து, பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக பால்குடம் எடுத்து சென்று, அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர். நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.