உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் துவக்கம்

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் துவக்கம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் இன்று (13ம் தேதி ) சிறப்பாக தொடங்கியது.

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொடியேற்றத்துடன் மிக விமர்சையாக இன்று (13ம் தேதி ) தொடங்கியது. விழாவை முன்னிட்டு, முக்கிய நிகழ்வான கருட சேவை 15ம் தேதியும்,  திருத்தேர் உற்சவம் 19ம் தேதி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !