திருப்பரங்குன்றம் பத்ரகாளி அம்மன் கோயிலில் உற்ஸவ விழா
ADDED :1573 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பத்ரகாளி அம்மன் கோயிலில் 30ம் ஆண்டு உற்சவ விழா நடந்தது. கோயிலில் மே 10ல் கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினம் மூலவருக்கு பூஜை நடந்தது. நேற்று விளக்கு பூஜை நடந்தது. இன்று பெண் பக்தர்கள் பொங்கல் வைத்தல், தீச்சட்டி எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைத்தனர். மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.