பணிவு என்பது உயர்பண்பாகும்
ADDED :1244 days ago
ஒருவரிடம் பணமும், பதவியும் வந்து சேரும்போது, அவர் பணிவாக நடக்க வேண்டும். அப்படி நடந்தால் அவரது வாழ்வு நலமுடன் அமையும். அதுமட்டும் இல்லை. உண்மையான பணிவு என்பது உள்ளத்தில் இருந்து வர வேண்டும். அதாவது பார்வை, சொல், செயல், நடை, உடைகளில் பணிவாக இருக்க வேண்டும்.
‘பணிவு என்பது உயர்வான குணம். அனைவரிடமும் பணிவுடன் நடந்தால் இறைவன் நம்மை உயர்வான அந்தஸ்தில் வைத்திருப்பான்’ என்கிறார் நாயகம்.