பாலமலை ரங்கநாதர் கோவிலில் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED :4 hours ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோவிலில் நடந்த தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இங்கு கடந்த ஏப்., 25ம் தேதி சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, அன்ன வாகன உற்சவம், கருட வாகனம், அனுமந்த வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருத்தேர் உற்சவ விழாவையொட்டி முதலில் யானை வாகன உற்சவம், தொடர்ந்து சின்னத்தேர் உற்சவம் நடந்தது. மாலை, 5:00 மணி அளவில் ரங்கநாதர் தாயார்களுடன் திருத்தேரில் எழுந்தருளி, கோயிலை சுற்றி உள்ள வீதிகளில் வலம் வந்தார். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி சிறப்பு அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் செய்து இருந்தார்.