உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளார் பிரமோற்சவ விழா : தங்க காக வாகனத்தில் சனீஸ்வரன் வீதியுலா

திருநள்ளார் பிரமோற்சவ விழா : தங்க காக வாகனத்தில் சனீஸ்வரன் வீதியுலா

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் பிரமோற்சவ விழாவில் தங்ககாக வாகனத்தில் சனிஸ்வர பகவான் வீதி உலா நடந்தது.

காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவ விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த தினம் 27ம் தேதி முதல் 1ம் தேதி வரை விநாயகர் மற்றும் சுப்ரமணியன் உற்சவம்,கடந்த 2ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு,கடந்த 3ம் தேதி செண்பகதியாராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன் வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 7ம் தேதி தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 10ம் தேதி 5தேர் திருவிழா நடந்தது. நேற்று இரவு சனிஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளினார். முன்னதாக சனிஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டது. பின் தங்க காகவாகனத்தில் எழுந்தருளிய சனிஸ்வர பகவான் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா நடந்தது. இவ்விழாவில் கட்டளை விசாரணை கந்ததசாமி தம்பிரான் சுவாமிகள்,கோவில் அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !