உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி பிரதோஷ பூஜை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி பிரதோஷ பூஜை

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், வைகாசி மாத வளர்பிறை பிரதோஷ பூஜை நடந்தது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்,  வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, கோவில் கொடிமரத்திலுள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரிலுள்ள சிறிய நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி ஆகியவற்றுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம்,தேன், இளநீர், எலுமிச்சை, தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நேற்று செய்யப்பட்டது. ‍தொடர்ந்து நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இதை தொடர்ந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், மூன்றாம் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறையின் கடைசி நாளான இன்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !