உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கடையூர் மகாமாரியம்மன் கோவில் தீமிதி விழா

திருக்கடையூர் மகாமாரியம்மன் கோவில் தீமிதி விழா

மயிலாடுதுறை : திருக்கடையூர் அருகே டி. மணல்மேட்டில் மகாமாரியம்மன்  கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து தீ மிதித்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே டி. மணல்மேடு கிராமத்தில்  மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 3 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும்  மகாமாரியம்மன் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனையடுத்து நேற்று தீமிதி திருவிழா முன்னிட்டு மாலை 6 மணி அளவில் மார்கண்டேயர் கோவிலில்  இருந்து  கரகம் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க  மெயின் ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து இரவு 6:30 மணி அளவில் கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். தொடர்ந்து இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை டி. மணல்மேடு கிராமத்தினர் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு பொறையார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !