சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரசனம்
ADDED :1284 days ago
சபரிமலை, ஆனிமாத பூஜைகளுக்காக சபரிமலை நடை 14ம் தேதி மாலை திறந்தது. 15ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் செய்து வந்தனர். எல்லா நாட்களிலும் உஷபூஜை, களபாபிஷேம், உச்சபூஜை, தீபாராதனை, அத்தாழபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன், உதயாஸ்தமன பூஜை மறறும் படிபூஜை நடைபெற்றது. நேற்று 19ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. ஆனி மாதம் நடை திறப்பு கடை சி நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.