உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமழிசை ஜெகந்நாதர் கோவிலில் வரும் 7ல் கொடியேற்றம்

திருமழிசை ஜெகந்நாதர் கோவிலில் வரும் 7ல் கொடியேற்றம்

திருமழிசை : திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா, வரும் 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் உள்ளது ஜெகந்நாத பெருமாள் கோவில். இங்கு, இந்த ஆண்டு ஆனிப்பிரம்மோற்சவ திருவிழா, வரும் 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று, காலை 5:00 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். அன்று மாலை, சுவாமி தங்க தோளுக்கினியன் வாகனத்தில் வீதி புறப்பாடும் நடைபெறும். பிரம்மோற்சவ திருநாளில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை வரும் 9ம் தேதி காலையிலும், தேர்த் திருவிழா வரும் 13ம் தேதி காலையிலும் நடைபெறும்.வரும் 15ம் தேதி மாலை கொடியிறக்கத்துடன் ஆனி பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !