உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவநீத கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம்

நவநீத கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர்: மதுரை பொதும்பு கிராமத்தில் ருக்மணி சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 4ம் கால பூஜையை தொடர்ந்து கோயில் மூலஸ்தான  கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோயில் கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றினர். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை  குருநாதன் சேர்வை வகையறாக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !