திருப்பாதிரிபுலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் 13ம் தேதி தேரோட்டம்
ADDED :1223 days ago
கடலுார்: திருப்பாதிரிபுலியூர் வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி, வரும் 13ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.கடலுார், திருப்பாதிரிபுலியூர் வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமி தாயாருக்கு தினமும் சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்து வருகிறது.காலை மாலை இரு வேளைகளிலும் சிறப்பு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. நேற்று காலை வேணுகோபால் சேவை, இரவு தங்க கருட சேவை நடந்தது. இன்று காலை ஊஞ்சல் உற்சவம், இரவு ஹனுமந்த வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.வரும் 13ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ்பாபு, ஆய்வாளர் சுபத்ரா, பட்டாச்சாரியார் தேவநாதன், கணக்கர் ஆழ்வார் செய்து வருகின்றனர்.