இதைப் படித்தால் கை மேல் பலன்..
ADDED :1333 days ago
மகப் பெறும் பேறு வேண்டின்
மாநிதி கிடைத்தல் வேண்டின்
மிகுந்ததோர் கல்வி வேண்டின்
மேதினி புரத்தல் வேண்டின்
பகைத்திறம் வேறல் வேண்டின்
படர் புகழ் வயிரவர் பேரை
நகைத்தலைத் தெரியல் வேண்டின்
நகருழிச் சார்தல் வேண்டும். இப்பாடலை தினமும் இவரது சன்னதிகளில் படிப்பவர் வாழ்வில் பெயர் சொல்லும் பிள்ளை, நல்ல வழியில் பொருள் சேர்க்கை, பிறருக்கு உதவும் குணம், பகை இல்லாத பண்பு, மனஅமைதி, நீண்ட ஆயுள், உண்டாகும்