பாதாள பைரவர்
ADDED :1197 days ago
ராவணனை கொன்ற பாவம் பிரம்மஹத்தி தோஷம் ராமனை பிடித்தது. இப்பாவம் நீங்க ராமேசுவரம் கடலோரத்தில் சிவலிங்கம் அமைத்து ராமர் வழிபட்டார். பைரவர் வடிவத்தில் வந்த சிவபெருமான் தன்னுடைய கால்களால் மிதித்து அத்தோஷத்தை பாதாளத்திற்கு அனுப்பினார். அதனால் அவருக்கு பாதாள பைரவர் என்ற பெயரும் உண்டு.