துாய்மையானவர் யார்
ADDED :1321 days ago
பிறப்பால் அனைவரும் துாய்மையானவர்கள்.அவர்கள் செய்யும் செயல்களால் பாவங்கள் ஏற்படுகின்றன.
நல்ல எண்ணம், அமைதியை விட சிறந்தது எதுவும் இல்லை.
அனாதை குழந்தைகளுக்கு இரக்கத்துடன் உதவி செய்யுங்கள்.
பக்கத்து வீட்டார் பட்டினி கிடக்க, நீங்கள் சாப்பிடும் உணவு அமிர்தமே ஆனாலும் அது நஞ்சு தான்.
குத்துச்சண்டையில் ஒருவனை வீழ்த்துவது வீரம் அல்ல! கோபம் வரும் போது அதனை நெறிப்படுத்தி சரியான தீர்வு காண்பவனே உண்மையான வீரன்.
தற்பெருமை கொள்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான்
அதிகமான உணவு உடல் நலத்தை கெடுத்து விடும்.