உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடியும் தமிழர் பண்பாடும்!

ஆடியும் தமிழர் பண்பாடும்!

ஆடிப் பட்டம் தேடி விதை – இது முதுமொழி. ஆடி மாதத்தில் விவசாயப் பணியை துவக்கினால் ஆண்டு முழுவதும் விளைச்சல்,  விவசாயிகள்  வாழ்க்கை சிறப்புறும் என்பது நம்பிக்கை. காலப்போக்கில் பருவமழை தவறியதால், ஆடியில் விதைப்பது புரட்டாசி, ஐப்பசி  என தள்ளிப்போகிறது.  ஆடியில் சுப காரியங்கள் நடத்துவதில்லை. புதுமணத் தம்பதியை ஆடி முதல் தேதியில் (தலை ஆடி) அழைத்து  பெண் வீட்டார் விருந்து கொடுப்பர்.  ஆடி நடுப்பகுதியிலும் விருந்துதான். ஆடி பதினெட்டாம் பெருக்கன்று புதுமணப் பெண்ணிற்கு தாலி  பெருக்கி போடும் நிகழ்வு இன்றும்  தொடர்கிறது. சில கிராமங்களில் ஆடியில் காடுகளில் பாரி வேட்டை என்ற பெயரில் முயல்,  குருவிகளை வேட்டையாடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !