தியானம் செய்யுங்கள்
என்கிறார் வள்ளலார்
* சூரியன் எழுவதற்கு முன், நீ எழுந்து தியானம் செய்.
* கடவுளின் பெயரைச்சொல்லி உயிர்ப்பலி கூடாது.
* அளவாக சாப்பிடு. பசி இல்லையென்றால் சாப்பிடாதே.
* உன்னை நம்பியவர்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்யாதே.
* நல்லவர்களின் மனதை நடுங்கச் செய்யாதே.
* வாழ்க்கைக்கு பணம் தேவையாக இருந்தாலும், அதை நல்ல வழியில் தேடு.
* உன்னிடம் உதவி கேட்டு வருபவரிடம் மென்மையாக நடந்து கொள்.
* ஒருவரது வயிற்றை பசி என்னும் நெருப்பு எரிக்கும்போது, அதை உணவால் அணைத்திடு.
* ஏழை, பணக்காரர் என்று யாரையும் ஏளனம் செய்யாதே.
* மாலை வெயில் உடலில் படும்படி சிறிது நேரம் நிற்க வேண்டும்.
* புண்ணியம் செய்வதற்கு முதலில் கஷ்டமாகவும் பிறகு சுகமாகவும் இருக்கும்.
* உண்மையைச் சொல். அது உன் வார்த்தையை பாதுகாக்கும்.
* மனம், வாக்கு, செயல் ஆகியவை ஒரே மாதிரியாக இருக்கட்டும்.
* அன்பு இருக்கும் இடத்தில் கடவுள் இருப்பார்.
* கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் வேண்டாம்.