உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா தொடக்கம்

காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா தொடக்கம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி இன்று காலை 9:15 மணிக்கு அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து கோயில் கொடிமரத்தில் சிவாச்சாரியார் பிரசன்னகுமார் கொடியேற்றினார். ஜூலை 29 ல் ஊஞ்சல் தரிசனம், ஆக. 1 ல் பால்குடம், பூத்தட்டு வழிபாடு, ஆக. 2 ல் திருவிளக்கு பூஜை, முளைப்பாரி எடுத்தல் நடக்கிறது. ஆடிப்பெருக்கான ஆக. 3ம் தேதி சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை வேட்டையன்படி விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !