உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா

திருச்செந்துார் சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா

திருச்செந்துார்: திருச்செந்துார் மேலத் தெரு யாதவர் முதாய சுடலைமாட சுவாமி கோயில் விழா நேற்று கோகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இக்கோயில் விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் மாலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் எடுக்கப்பட்ட தீர்த்தம் சண்முக விலாசம் மண்டபத்தில் இருந்து கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.


இரவு சுவாமிக்கு கும்பம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. 12.00 மணிக்கு குடியழைப்பு தீபாராதனையும் காப்புகட்டுதலும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு வாழைத்தார் கட்டி நேர்ச்சை செலுத்தினர். கொடை விழாவின் முக்கிய நாளான நேற்று பகல் மற்றும் இரவு 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 1.30 மணிக்கு சிறப்பு வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. இன்று (ஜூலை 27)அதிகாலை 4 மணிக்கு படைப்பு தீபாராதனையும் 7 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. கொடை விழாவில் விவேகா கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியர் நாராயணன், வெங்கடேஷ், யாதவ வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி, செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் ராமசுப்பிரமணியன், ராஜ் எண்டர்பிரைசஸ் ராஜ், திமுக., தகவல் தொழிற்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் நம்பிராஜ், வீரபாகு மஹால் வீரபாகு, ல் அர்ச்சனா க்தி, அதிமு க . , முன்னாள் ஒன்றிய பெருளாளர் பழக்கடை திருப்பதி, முத்து மணிகண்டன், தொழிலதிபர்கள் வீரக்கண், ராஜேஷ்வரன், செங்கண்ணன், முருகன், மூக்கன், கவுன்சிலர்கள் ஆறுமுகம், முத்து கிருஷ்ணன், திமுக . , நகர செயலாளர் வாள்சுடலை, மயில்மணி, மந்திரம், நல்லக்கண்ணு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை யாதவ மகா சபையினர் மற்றும் கொடைவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !