அய்யனார் அச்சமுத்தம்மன் கோயிலில் பால்குட உற்ஸவம்
ADDED :1259 days ago
திருநகர்: திருநகர் அய்யனார் அச்சமுத்தம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பால்குடா உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். மூலவர்களுக்கு பாலாபிஷேகம், பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வளையல் அலங்காரம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் கல்கத்தா காளியம்மன் கோயிலில் மூலவருக்கு வளையல் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பக்தர்கள் ஒரு லட்சம் போற்றி பாடினர். ஜநூறுக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வளையல்கள், ஜாக்கெட் துணி, கூல் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.