திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி பூஜை
ADDED :1298 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோயில் நுழைவு மண்டபத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமிக்கு அபிஷேகம் பூஜை முடிந்து சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். மலைக்கு பின்புறம் பால் சுனை கண்ட சிவபெருமான், எஸ்.ஆர்.வி. நகர் கல்கத்தா காளியம்மனுக்கு பூஜை முடிந்து சிறப்பு அலங்காரமானது.