உத்தரகோசமங்கை அருகே வைகை கிராமத்தில்பவுர்ணமி சிறப்பு பூஜை
ADDED :1225 days ago
உத்தரகோசமங்கை, உத்தரகோசமங்கை அருகே வைகை கிராமத்தில் உள்ள சுடலை மாடன், பேச்சியம்மன், பிரம்ம ராக்காச்சி அம்மன் கோயிலில் ஆடி பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பூஜைகளை திருமாறன், ரவீந்திரன் மற்றும் கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.