காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை
ADDED :1473 days ago
ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் நடக்கும் அன்னதானத் திட்டத்திற்காக விஜயவாடாவை சேர்ந்த சூரியகாந்த் பிரசாத் குடும்பத்தினர் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 116 ரூபாய் கான காசோலையை கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி மற்றும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுரேஷ் பாபுவிடம் வழங்கினர் இவர்களுக்கு முன்னதாக சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர் .கோயிலில் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.