பரமக்குடி வரதராஜ பெருமாள் கோயிலில் 108 கலசாபிஷேகம்
ADDED :1159 days ago
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி மாத பிறப்பையொட்டி 108 கலசாபிஷேக விழா நடந்தது. இக்கோயிலில் தனிச் சன்னதியில் அலமேலு மங்கா, பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் அருள் பாலிக்கிறார். தொடர்ந்து ஆவணி மாத பிறப்பையொட்டி நேற்று முன்தினம் காலை 108 கலச பூஜைகள் நடத்தப்பட்டு அபிஷேகம் நடந்தது. பின்னர் மாலை சேஷ வாகனத்தில் பெருமாள் அலங்காரமாகி வீதி வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.