கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல என்பதன் பொருள் என்ன?
ADDED :5048 days ago
தேடிச் சென்ற விஷயம் தானாக நம் கைக்கு வந்து சேர்ந்தால், பருத்தியே புடவையாக காய்த்தது போல இரட்டிப்பு மகிழ்ச்சிஉண்டாகும் அல்லவா! அதையே இப்பழமொழியில், தெய்வதரிசனம் பெறுவதற்காக கோயிலுக்குச் செல்லும்போது நடுவழியில் கடவுள் காட்சி அளித்ததாக குறிப்பிடுகின்றனர். குறைந்த முயற்சியிலேயே கிடைப்பது என்றும் பொருள் கொள்ளலாம்.