திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் : கிரிவலம் சென்று வழிபாடு
ADDED :1345 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பல மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, கோவிலில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதில், ஆவணி மாத பவுர்ணமி திதி, இன்று மாலை 6:20 மணி முதல், நாளை மாலை 4:30 வரை உள்ளது. ஆவணி மாத பவுர்ணமி முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டு வருகின்றனர்.